கவிதை



பாறைக்கருகே
தயங்கி நிற்கின்றன
இளம் ஆல விழுதுகள்


வேகமாய் ஆடும் வேம்பு
கண்ணாடியறைக்குள்
சுழலும் மின்விசிறி


ஆளுங்கட்சி, எதிர்கட்சி
பொதுக்கூட்டம்
திருட்டு மின்சாரத்தில்


வந்து செல்லும்
பழகிய திருடன்
உறங்கும் நாய்



சாலை விரிவாக்கம்
சாய்த்த மரங்களில்
கூடு தேடும் குருவிகள்

No comments: