நான் புத்தன்




கடைக்குக் காவலாக
சட்டை இல்லா முதலாளி
மட்பாண்டம் விற்றால்தான்
மறைக்கக் கிடைக்கும் துணி

மண் எடுத்துப் பிசைந்து
அளவாய் நீர் சேர்த்து
குடமொன்று ஏற்றி
குவிவாய் வாய் செய்து
கனக்கக் கனக்க
பாண்டம் பிசையும் தொழில்
பாரினிலே படைத்தல் தொழில்

பொங்கலுக்குப் பானை
கார்த்திகைக்கு விளக்கு
ஏற்றி வைத்தால் எப்போதும்
காற்றடித்தாலும் அணையா அடுப்பு
வண்ணக் கிளிஞ்சட்டி
வண்ணப் பானைகள்
நீர் விட்டுச் செடி வளர்க்க
நெட்டைத் தொட்டிகள்
எல்லாம் மண்தான்
என்றாலும் மகத்துவம்தான்
வார்ப்புக்கு உள்ளானால்
மண்ணும் பொன்னாகும்


மண்ணாயினும் மனிதனாயினும்
படைப்பு உயிராகும்
சொல்லாயினும் எழுத்தாயினும்
பொருள் கொண்டால் படைப்பாகும்.


என்னதான் ஆனாலும்
இதே தத்துவத்தில்
போலிகளும் கலந்து போக
மண் ஆகும் என் பிழைப்பு


பூப் போலே வண்ணத்தில்
பொன் போலும் மின்னலிலே
கண் பறிக்கும் கயமையாலே
பிளாஸ்டிக்கே உலகமாச்சு


பொன் வைத்த இடத்தில்
பூ வைத்து ஒரு காலம்
பூ வாய்த்த இடத்தினிலே
மண் வைத்த காலம் மாறி
எது வைத்த போதிலுமே
பிளாஸ்டிக்கே முன் நிற்கும்
மின்னும் பொன்காலம்
மின்னஞ்சல் கற்காலம்


இடுப்புகளின் இரண்டு பக்கம்
எடுக்கும் நீர் பெண் சுமக்கும்
அழகெல்லாம் போயாச்சு
அறிவியலும் வளர்ந்தாச்சு


கார்த்திகை மையிருட்டினிலே
சிரட்டைக்குள் கிளிஞ்சல் ஏற்றி
டார்ச் அடித்து ஊர்வலங்கள்
எல்லாம் பொய்யாச்சு


பொம்மைக் காரோட்டி
பொழுதெல்லாம் வீணாக்கி
இருந்த இடம் விட்டு
நகராத விளையாட்டு


ஐம்பூதம் அளவறிந்து
அடக்கி ஆட்சி செய்து
காலம் மிகக் கருதி
கணத்தில் சமையல் செய்த
காலம் மலை ஏறிற்று.


உருளைக்குள் வாய்வடக்கி
ஓட்டையிலே தீக் கொளுத்தி
காலத்திற்கு கருவி வைத்து
குக்கரிலே வேகும் சோறு
உண்பதற்கு வெறும் பதறு


ஊருக்கு மரம் நட்டு
உறவெல்லாம் பழம் தின்ன
யாரும் நீர் விடாது
தானே வளரும் தலைமுறைகள் போய்


பேருக்குச் செடியென்று
காகிதம் போல் பூப்பூக்கும்
தொட்டில் குழந்தையாய்
தொட்டிக் குரோட்டன்சகள்!
ரிட்டைடு ஆன தாத்தா
தண்ணீர் விடும் மெசினானார்


எல்லாம் பார்த்து விட்டே
நிர்வாணமாய் நானிருக்கேன்
என் வயதிலியே நான் புத்தன்
ஆசனமோ பிளாஸ்டிக் மரம்


இறுதியாய் ஓன்று சொல்வேன்
உறுதியாய் நம்பி ஏற்பீர்
உடம்பாகும் மண் போலே
உற்ற துணை ஏதுமில்லே
மறந்தால் மனிதர் நீங்கள்
மண் ஆகும் உடல் பெறுவீர்
கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு





நிலத்தை உழுது தானியம் விளைவிக்கும் உழவர்களின் கூட்டம் ஒருபுறம்; கால்நடைகளை மேய்த்து மந்தையைப் பெருக்கி வாழும் இடையர்களின் கூட்டம் ஒருபுறம் என இரு வேறு தொழில்கள் செய்வோர்தான் கடந்த நூற்றாண்டில்கூட தமிழகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கினர். கிராமம் என்றால் உழவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் மட்டும் முதன்மையிடம் பெறும் நிலையில், சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது என்ற நிலையில் இன்னும் பலர் தேவைப்படுகின்றனர். இன்றைய ஆடம்பரமான தேவைகள் எதுவும் தேவைப்பட்டிராத கிராமங்களில், வேறுவகைப்பட்ட தேவைகள் குறைவு. எனினும் மக்கள் வாழ்க்கைக்குக் கைவினைஞர்களின் பணி மிகவும் அத்தியாவசியமானதாகும். மர ஆசாரி தொடங்கி பல்வேறு தரப்பினரின் உதவி/சேவையைக் கிராமத்தினர் பயன்படுத்திக் கொண்டதால்தான், அவர்கள் வேறு ஊருக்குப் புலம் பெயர்தல் குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை.

உழவுத் தொழில் செய்திட, நிலத்து மண்ணைப் புரட்டிட ‘ஏர்’ என்னும் மரக்கருவி அடிப்படையானது. மரத்தை வெட்டி, நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, துளையிட்டு, ஒன்று சேர்த்து ஏராக வடிவமைப்பதற்கு மர ஆசாரி தேவைப்படுகிறார். மரவேலை செய்வது பற்றிய தொழில் நுட்ப அறிவும், அதற்குத் தேவைப்படும் கருவிகளும் மர ஆசாரியிடமே இருந்தன.

ஏரின் நுனியில் பொருத்தப்படும், ஓர் அடி நீளமான ‘கொழு’ எனப்படும் இரும்புத்துண்டு அத்தியாவசியமானது. இரும்பை உருக்குவதுடன், இரும்பைப் பழுக்க நெருப்பில் காய வைத்து, சம்மட்டியால் தட்டி வேண்டிய வடிவில் உருமாற்றிட கொல்லர் எனப்படும் தொழில்நுட்பவாதி தேவைப்படுகின்றார். ‘கொல்லம்பட்டறை’ எனப்படும் இரும்பு வேலை தொடர்பான பட்டறை ஓரளவு பெரிய கிராமங்களில் எல்லாம் இருந்தது. தோலினால் செய்யப்பட்ட துருத்தியின் மூலம் நெருப்புஉலையினுள் காற்றைச் செலுத்தி, இரும்பைப் பழுக்கக் காய்ச்சிட முயன்றது நுட்பமான விஷயம். ‘கொழு’ இல்லாவிடில் கூர்மையான மர நுனியினால் மண்ணை உழுவது என்பது சிரமமானது.

உழவுக்குத் தேவைப்படும் மண்வெட்டி, கோடாரி, அரிவாள் போன்ற இரும்புக் கருவிகளைக் கொல்லர்கள் கிராமத்தினருக்குத் தாராளமாகச் செய்து வழங்கினர்.

சாமான்களையும் ஆட்களையும் இழுத்துச் செல்லும் மரவண்டிகளை மர ஆசாரிகள், தங்களுடைய கைவேலைத் திறமையினால் நுணுக்கமாகச் செய்தனர். மரச் சக்கரங்களுக்கு இரும்புப் பட்டா போட வேண்டியது அவசியம். இல்லாவிடில் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் மரச் சக்கரம் நொடியில் விழுந்து நொறுங்கிவிடும். இரும்புப் பட்டாவை நெருப்பிலிட்டுச் சூடேற்றி, மரச் சக்கரத்தில் திணிக்கும் கொல்லரின் கைத்திறனும் தனித்தன்மை வாய்ந்தது.

மரவண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகள் தொடர்ந்து பல மைல்கள் சுமையைத் தாங்கி இழுத்துச் செல்லும்போது, கால் குளம்புகள் தேய்ந்துவிடும். எனவே இரும்பிலான லாடங்கள் மாட்டின் குளம்புகளில் இரும்பு ஆணிகள் மூலம் பொருத்தப் பெற்றன. மாட்டின் குளம்புகளுக்கேற்ற இரும்பு லாடங்களை வடிவமைப்பதுடன், மெல்லிய இரும்பு ஆணிகள் தயாரிப்பதும் கொல்லர்களின் வேலையாக இருந்தது. அறுபதுகளில் எங்கள் ஊர் கொல்லம்பட்டறையின் முன்னர் ‘பட்டா’ போடுவதற்கான மாட்டு வண்டிகளும், லாடம் அடிப்பதற்காகக் காளைகளும் காத்துக் கிடந்தன.

கிராமத்தில் காரை வீடு எனப்படும் மச்சு வீடுகள் இருபது இருந்தால் பெரிய அதிசயம். அப்புறம் தென்னங் கைகள் மீது பாவப்பட்ட சீமை ஓட்டு வீடுகளும், பெரிய எண்ணிக்கையில் ஓலை வீடுகளும்தான் இருந்தன. தென்னை மரத்தை அறுத்துக் கைகளாக மாற்றிட ஆசாரியினால்தான் முடியும். ஊருக்கு வெளியே ‘ரம்பப் பள்ளம்’ இருந்தது. பத்தடி நீளமும் ஆறு அடி அகலமும் ஆறு அடி ஆழமும் மிக்க குழியின் மீது மரத்தை வைத்து, குழிக்குள்ளிலிருந்து ஒருவரும், குழிக்கு மேலிருந்து ஒருவரும் ரம்பத்தை மேலும் கீழும் இழுத்து, துண்டுகளாக்கினர். பெரும்பாலும் கேரளாவிலிருந்து வந்த மர ஆசாரிகள் ‘ரம்பக் குழி’யின் மூலம் கூலிக்காக மரத்தை அறுத்துத் தந்து கொண்டிருந்தனர். முன் மண்டையில் குடுமி வைத்திருந்த மலையாளி ஒருவர் -‘குடும்பி’ என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டவர்-எங்கள் ஊரில் இருந்தார். வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர் இன்று அடையாளம் இழந்து முழுக்கத் தமிழராகப் போய்விட்டனர்.

நுட்பமாக மரவேலைகள் செய்யத் தெரிந்த மர ஆசாரிகள் எங்கள் ஊரில் இருந்தனர். அணிப்பிள்ளை சுப்பையா போன்றவர்கள் மரவேலைக்குப் பெயர் பெற்றவர்கள். வீடு கட்டுகின்றவர்களிடம் மர ஆசாரிகள் பவ்வியமாகப் பேசினர். அவர்களும் ஆசாரிகளிடம் இணக்கமாகப் பேசினர். பரஸ்பரம் மரியாதை நிலவியது. வெறுமனே காசுக்காக வேலை பார்க்கின்றவர் என்று வீட்டுக்காரரும் நினைக்கவில்லை. வெறுமனே காசுதானே என்று ஏனோ தானோவென்று ஆசாரியும் வேலை செய்யவில்லை. கைவினைஞர்களுடன் ஆன உறவு ஒருவிதமான அன்னியோன்னியமாகக் கிராமத்தில் நிலவியது. இன்று கைவினைஞர்களுடனான உறவு வெறும் வணிக உறவாக மாறிவிட்டது.

மண்ணைப் பிசைந்து சரியான பக்குவத்தில், சுழற்றிவிடப்படும் சக்கரத்தின் நடுவில் வைத்துப் பானை அல்லது சட்டி அல்லது தட்டு என வடிவமைத்து, அவற்றை நிழலில் உலர்த்தி, சூளையிலிட்டுச் சுட்டு, எல்லோருக்கும் தேவைப்படும் பாத்திரங்களைத் தரும் குயவர்கள் வெறும் கைவினைஞர்கள் மட்டுமல்ல. மனிதநாகரிகத்திற்கான ஆதாரம். குடும்ப வாழ்க்கை, குடியிருப்புகள் தோன்றுவதற்கான பின்புலத்தில் யோசித்துப் பார்த்தால் சட்டி பானைகளின் முக்கியத்துவம் புலப்படும். இறைச்சி அல்லது தானியத்தை நேரடியாக நெருப்பிலிட்டு வாட்டுவது ஒரு புறம். சட்டியிலிட்டு அவற்றைச் சமைப்பது என்பது நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. மனித இருப்பில் பக்குவப்பட்ட நிலை என்பது சமைக்கப்பட்ட உணவுடன் நெருங்கிய தொடர்புடையது. ஈரமான களிமண்ணிலிருந்து சட்டி, பானையை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிந்த குயவர்கள் மனித குல நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நாகரிகம் பற்றிய மதிப்பீட்டினுக்கு அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மண்பாண்டச்சில்லுகள் முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன. பெரிய கிராமங்களில் வேளார் என அழைக்கப்படும் குயவர்களுக்கெனத் தனியாக நிலங்கள் கிராமத்தின் சார்பில் பயன்பாட்டினுக்கென விடப்பட்டிருந்தன. தங்கள் ஊருக்கெனக் குயவர் வேண்டும் என வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டவருக்கு ஊரின் சார்பில் மானியமாக நிலம் தரப்பட்டிருந்தது.

குயவர்கள் கிராமத்துக் காவல் தெய்வம் என அய்யனாருக்கு ‘மண்குதிரைகள்’ செய்து கொடுத்தனர். நேர்த்திக் கடன் செய்து கொண்டவர்களுக்காக மாடு, கன்றுக்குட்டி, நாய், பிள்ளைத் தொட்டில் போன்ற மண் பொம்மைகளும் செய்து கொடுத்தனர். மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி தூக்கி ஆடி வருகிறவர்களுக்கு, மண் சட்டியையும் செய்து தந்தனர்.

கோடைக்காலத்தில் புதிய மண்பானையில் தண்ணீரை வைத்துக் குடித்தால் ஜில்லென உடலுக்கு இதமாக இருக்கும். ‘பானாக்கம்’ எனப்படும் புளி, வெல்லம், எலுமிச்சை கலந்த பானம், புதிய மண்பானையில் தயாரித்து வைத்து, ஓரிரு மணிநேரம் கழித்துப் பரிமாறினால், குடிப்பதற்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

கிராமங்களில் யாராவது ‘அக்கி’ எனப்படும் தோல் நோயினால் துயரமடையும்போது, குயவரிடம்தான் செல்வார்கள். அவர் கோழி இறகு அல்லது மயில் இறகினால் சிவந்த மண் குழம்பை அக்கியின் மீது தடவிவிடுவார். சில நாட்களில் நோய் குணமாகிவிடும். அக்கி நோய்க்கு எனத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை. செம்மண் குழம்பு தடவுவதை அவர்கள் தொண்டாகச் செய்கின்றனர். அதற்கெனப் பணம் எதுவும் வாங்குவதில்லை.

குயவர்கள் கர்த்திகை அன்று வீடுகளில் விளக்கு எரிப்பதற்காக, ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் கிளியாஞ்சுட்டி எனப்படும் சிறிய மண் விளக்குகளை இலவசமாக வழங்குவார்கள். இதற்கென ஊர் மானியம் அவர்களுக்கு உண்டு.

வயலில் அறுவடை முடிந்து களத்துமேட்டில் நெல் அளக்கும்போது, கடைசியில் கொல்லர், குயவர் இருவருக்கும் ‘சுதந்திரமாக’ நெல் வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. நெல் நன்கு விளைந்து, மகசூல் நன்றாக இருந்தால், குடியானவர்கள் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். சில பகுதிகளில் நெல் அரிகளைக் கட்டாக அப்படியே வழங்குவதும் உண்டு. குடியானவர்களுக்காகச் செய்து தருகின்ற வேலைகளுக்குக் கொல்லரும், மண் பாத்திரங்களுக்குக் குயவரும் பணம் பெற்றுக் கொண்டாலும், தங்கள் ஊரிலுள்ள கைவினைஞர்கள் தொடர்ந்து நன்கு வாழ வேண்டும் என்பதற்காகக் களத்துமேட்டில் நெல் வழங்கும் முறையைக் கிராமத்தினர் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கவேண்டும். மழை இல்லாமல், விவசாயம் சாவியாகப் போனால், அதனால் குடியானவர்களுடன் பாதிக்கப்படுவது, கைவினைஞர்களும்தான்.

கிராமத்தினர் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்புடையவர்கள் சலவைத் தொழிலாளரும் முடிவெட்டும் தொழிலாளரும் ஆவர். சமூக மதிப்பீட்டில் மிகவும் இழிவாகக் கருதப்பட்ட இவர்கள் முன்னொரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இழிவாகக் கருதப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

நாவிதர் அல்லது அம்பட்டையர் என்று குறிப்பிடப்பட்டவர்கள் தலைமுறைகள் தோறும் முடிவெட்டுதல், சவரம் செய்தல், மொட்டை அடித்தல் போன்ற வேலைகளை கிராமத்தினருக்குச் செய்து வந்தனர். பேனும் ஈரும் மிகுந்து கரடிபோல அடர்த்தியான தலைமுடியுடன் திரியும் கிராமத்தினரை, தங்களுடைய ஒப்பனை மூலம் நேர்த்தியாக மாற்றும் கைவன்மை மிக்கவர்களாக இத்தகையோர் விளங்கினர். ஊருக்கு வெளியே மரத்தடி அல்லது சிறிய கீற்றுக் கொட்டகையில்தான் முடி அலங்கார நிலையங்கள் நடைபெற்றன. வெறும் உடம்புடன் உட்கார்ந்திருப்பவர்கள் தலையில் புகுந்து விளையாடும் கத்தரிக்கோல் தெறிக்கும் முடித்துகள்கள் உடல் எங்கும் பரவிடும். ஒரு சிறிய மிஷினை வைத்துச் சிறுவர்களின் தலையைச் சுற்றி நகர்த்துவதால் முடி இழுக்கப்படும்போது, வலியினால் தலை தானாகவே அசையும். ‘அப்பா தலையை அசைக்காதீங்க, காதை வெட்டிப்புடும்’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பார் முடிவெட்டுபவர். வட்டக் கிராப் எனப்படும் முடிவெட்டு தலையில் வட்டமான சட்டியைக் கவிழ்த்ததுபோல இருக்கும்.

வசதியானவர் வீடுகளுக்குச் சென்று காத்திருந்து, ஏழெட்டுப் பேருக்கும்கூட முடியை வெட்டிவிட்டுப் பொறுமையுடன் திரும்பிவரும் நாவிதர் வாழ்க்கை பொருளியல் ரீதியில் பலவீனமாக இருந்தது.

அரிசியில் அரை அளவுதான் முடி இருக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பெற்றோர் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஸ்டைலாக முன்னால் முடிவைக்கச் சொன்னாலும் முடிவெட்டுபவர் மறுத்துவிடுவார். தலையில் முடிரொம்ப இருந்தால் சளி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

கிராமங்களில் பலர் செருப்பு அணிவது கிடையாது. எனவே காலில் முள் குத்திக் கொண்டு சீழ்ப் பிடித்து அவதிப்படுவார்கள். பாதத்தில் நுழைந்த முள்ளின் முனை, உள்ளேயே முறிந்து தங்கிவிடுவதால், நடக்கமுடியாமல் சிரமம் ஏற்படும். முள்வாங்கியினால் கூட முள்ளை எடுக்கமுடியாதபோது, நாவிதரிடம் வருவார்கள். முள் குத்தியதால் சிரமப்படுகிறவரை ஓரிருவர் பிடித்து அமுக்கிக் கொள்ள, நாவிதர் சிறிய கூர்மையான கத்தியினால் முள் குத்திய இடத்தைக் கீறிவிடுவதுடன் சீழைப் பிதுக்கி வெளியேற்றுவார். ஓரிரு நாட்களில் முள் குத்திய இடம் குணமடையும். முள்ளை வெளியேற்றுவதற்காகச் செய்யும் வேலைக்கெனத் தனியாகப் பணம் எதுவும் தரமாட்டார்கள். நாவிதரின் பணி சேவை ஆகும். முடிவெட்டுவதுடன் கால் கை விரல்களில் வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டுதல், தலையைத் திருப்பிச் சொடக்கு முறித்து மசாஜ் பண்ணுதல் என நாவிதரின் பணிகள் பன்முகப்பட்டவையாக விளங்கின. சில சாதியில் தனிப்பட்ட நாவிதர் இருந்தார். அவர் குடிமகன் என்று அழைக்கப்பட்டார். அவரும் எல்லோரையும் அப்பா என்றே அழைப்பார். இறப்பு வீடுகளில் நடைபெறும் சடங்குகளில் குடிமகன்கள்தான் எல்லாச் சடங்குகளையும் முன்னின்று செய்தனர்.

நாவிதர் வீட்டுப் பெண்கள்தான் கிராமத்தில் எல்லா சாதிப் பெண்களுக்கும் ‘பிரசவம்’ பார்த்தனர். இன்று மகளிரியல் மருத்துவரான பெண் டாக்டர் செய்யும் வேலையை, பரம்பரை அறிவின் துணையுடன் நாவிதர் சாதிப் பெண்கள் சிறப்பாகச் செய்தனர்.

பியூட்டி பார்லர், மகப்பேறு மருத்துவர் எனச் சமூகத்தில் கௌரவமாகக் கருதப்படும் தொழில்களைச் செய்த மருத்துவர் குலத்தினராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் நாவிதர்களின் மதிப்பு இன்றைய கால கட்டத்திலும் தாழ்வாகவே உள்ளது வருத்தமான விஷயம்.

ஏகாளி என்று அழைக்கப்படும் அழுக்குத் துணிகளை வெளுத்து சலவை செய்து தரும் சலவைத்தொழிலாளர்களும் கிராமத்தின் அங்கமாக வாழ்ந்து வந்தனர். பிறப்பு, இறப்பு என எல்லாச் சடங்குகளிலும் சலவையாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். பெரும்பாலான ஏகாளிகள் வருஷக் கூலிக்குத் தான் வீடுகளில் வேலை செய்தனர். சிலர் உருப்படிக்கு இவ்வளவு என்ற கணக்கில் சலவைத்துணிக்குக் காசு வாங்கினர். வீடு வீடாகப் போய் எடுத்துவரும் அழுக்குத் துணி மூட்டைகளைக் கழுதைமேல் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போவார்கள். பெரும்பாலும் ஆண்பெண் அடங்கலாகக் குடும்பத்தினர் எல்லாரும் வண்ணான் துறையில் உழைப்பார்கள். உவர் மண்ணைப் பெரிய மண் தாழிகளில் உரைத்து, அதில் அழுக்குத்துணிகளை முக்கி எடுப்பார்கள். நீரால் நிரம்பிய வெள்ளாவிப் பானைகளின் மீது துணியை அடுக்கி வைத்து, பானைக்குக் கீழே நெருப்பை மூட்டி, நீரைக் கொதிக்க வைப்பார்கள். பானையிலிருந்து கிளம்பும் நீராவி அழுக்குத் துணிகளின் வழியே நுழைந்து வெளியே வரும். அப்புறம் ஆற்று நீரில் துணிகளை அலசி, கருங்கல்லில் ‘ஹோ. . .ஹோ’ என சப்தத்துடன் தோய்த்துக் காய வைத்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். பெரும்பாலான சலவையாளர்கள் கல்வி அறிவற்றவர்கள், எனினும் துணிகளை அடையாளம் காண்பதற்காக அழியாத மையினால் குறிகளைப் போடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்குமெனத் தனிப்பட்ட குறி இருந்தது. சேப்பங்கொட்டை மை அல்லது கடையில் விற்கப்படும் மையை சிறிய குச்சியினால் தொட்டு, துணியின் நுனியில் குறியிடுவார்கள். எங்கள் வீட்டிற்குப் பல்லாண்டுகளாகத் துணி வெளுத்த சன்னாசி என்பவர் . . என்று குறியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வருஷக்கூலி பேசும் வெளுக்கும் சலவைத் தொழிலாளர்கள், அந்தக் கூலியை ஆதிக்க சாதியினரிடமிருந்து பெறுவதற்காக, அவர்கள் வீட்டிற்குப் பல தடவைகள் நடந்து கஷ்டப்பட வேண்டும்.

கிராமத்தில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த தலித்துகளுடைய வீட்டுத்துணிகளைத் துவைத்துத் தருவதற்காகப் ‘புதர வண்ணான்’ என்ற சாதியினரும் எங்கள் ஊரில் இருந்தனர். சமூக சாதிய அடுக்கில் அவர்களை மனித உயிராகக்கூடக் கருதாத கேவலமான சூழல் அன்று நிலவியது.

தட்டான் எனப்படும் பொற்கொல்லரும் கிராமங்களில் இருந்தனர். அவர்கள் தங்க ஆசாரி என்று அறியப்பட்டனர். பெரிய மண் பானையைக் கவிழ்த்தது போன்ற சட்டி அமைப்பில் உமியைக் கொட்டி, நடுவில் கரியினால் கங்கு மூட்டி, அதில் எதையாவது வைத்து ஊதிக் கொண்டிருப்பார்கள். தங்கத்தை எடைபோட கறுப்பும் சிவப்புமான குன்றிமணி விதையைப் பயன்படுத்துவார்கள். குடியானவ வீட்டுப் பெண்கள் தோடு, மூக்குத்தி அணிந்திருந்தாலே பெரிய காரியம். மேல் சாதியினர், வியாபாரிகள் வீட்டில்தான் தங்க ஆபரணங்கள் புழங்கின. வெள்ளிக் கொலுசினைக் காலில் அணிவது அப்பொழுது வழக்கமில்லை. விதம்விதமான மாடல்களில் ஜொலிக்கும் தங்க நகைகள் கிராமப்புறங்களில் மோஸ்தரில்லை. எனவே தேவைக்குத்தக்கபடி தங்க நகைகள் தயாரித்துக் கொடுத்த ஆசாரிகள் ஓரளவு வசதியுடன் வசித்துவந்தனர். குழந்தைகளுக்குக் காது குத்துதல், பெண்களுக்கு மூக்கு குத்துதல் கிராமப்புறங்களில் மும்முரமாக நடைபெற்றன. அதற்கு தட்டார் தேவைப்பட்டார்.

அறுபதுகளில்கூட உடம்பில் பச்சை குத்திக் கொள்வது என்பது கிராமங்களில் வழக்கிலிருந்தது. குறவர் சாதியைச் சார்ந்தவர்கள் பன்றிகளை வளர்த்துக் கொண்டு கிராமங்களில் வசித்தனர். அவர்கள் வீட்டுப் பெண்கள், கிராமத்தில் யாருக்காவது பச்சை குத்தவேண்டுமெனில் வீட்டிற்கே வந்து பச்சை குத்திவிட்டனர். பச்சை மையில் கலக்கப்படுவது தாய்ப்பால் என்று பேசிக்கொள்வார்கள். வீடுகளில் தானியங்களைச் சுமந்து செல்லப் பெரிதும் பனை நார்களினால் பின்னப்பட்ட பெரிய பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவை ‘கடகம்’ எனப்பட்டன. தானியத்தைப் புடைக்கப் பயன்படும் ‘சுலகு’ பனை நாரினால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக அடிக்கடி பிய்ந்துபோகும். அப்பொழுது அவற்றைப் பனைநாரினால் வலுப்படுத்தி சீராக்கிடும் பணியைக் குறவ வீட்டுப் பெண்கள் அருமையாகச் செய்தனர். ஆனால் அவர்களுக்குக் கூலி தருவதற்கு பெரிய வீட்டுப் பெண்கள் கடுமையாகப் பேரம் பேசினார்கள்.

சமையலுக்குத் தேவைப்படும் எண்ணெய், மாட்டுக்குத் தேவைப்படும் புண்ணாக்கு ஆகியனவற்றை மரச் செக்கில் ஆட்டித் தரும் பணியைச் செக்கார் எனப்படும் வாணியச் செட்டியார்கள் செய்தனர். மரச் செக்கில் கட்டப் பெற்றுள்ள காளை மாடுகள் அவற்றை இழுத்துக் கொண்டு நாள் முழுக்கச் சுற்றிவரும். செக்கில் இடப்பட்ட எள், மர உலக்கையினால் நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியேறும். செக்குத் தொழில்மூலம் கிடைக்கும் எண்ணெய் விற்பனை முழுக்கக் கிராமத்தைச் சார்ந்தே இருந்தது.

தையற்காரர் பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் தையல் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். சிறிய துணிக்கடையின் முன்னால் உள்ள கீற்றுக் கொட்டகையில் குறைந்த பட்சம் இரு தையற்காரர்களாவது இருந்தனர். யார் வந்து துணி கொடுத்தாலும் ‘ம். . . உடனே தந்திடுவோம்’ என்று வாங்குகிறவர், ஒவ்வொருவரையும் ஏழெட்டுத் தடவைகள் இழுத்தடித்துவிடுவார். அதிலும் பொங்கல், தீபாவளி நேரம் சாக்குப்போக்கு சொல்லுவதில் அவர் வல்லுநர் ஆகிவிடுவார். துணியைத் தந்தவர் சட்டைதைத்து விட்டாரா என்பதைக் கேட்க வருவதைத் தொலைவில் இருந்தே பார்த்துவிடும் தையற்காரர், அவருடைய துணியை எடுத்து மிஷினில் வைத்துத் தைப்பதைப்போலப் பாவனை செய்வார். ‘உங்க வேலைதான். காலையில் தந்திடுவேன்’ என்பார். அவர் அங்கிருந்து போனவுடன், அந்தத் துணி மரப்பெட்டிக்குள் போய்விடும். வேறு துணியை எடுத்து வைத்துத் தைக்கத் தொடங்குவார். தையற்காரரின் விருப்பப்படிதான் உடைகள் தயாராகும். அவை தொள தொளவென்று அல்லது இறுக்கமாக இருக்கலாம். பொருத்தமான ஆடை என்பது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது.

எழுபதுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சலூன், லாண்டரி, டெய்லர்ஸ் ஆகியன ஏற்படுத்தப்பட்டதுதான்.

நாற்காலியில் ஆளை உட்காரவைத்து, உடம்பைச் சுற்றி வெள்ளைத் துணியினால் மூடி, சானை பிடிக்கப்பட்ட கத்தரிக்கோலினால் முடிவெட்டும் சலூன்களில் முன்னும் பின்னும் வைக்கப்பட்டிருந்த பெரிய நிலைக் கண்ணாடிகள் சமத்துவத்தைக் கொண்டு வந்தன. வீடுகளுக்குப் போய், காத்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்த நாவிதர், சலூனை விட்டு எங்கும் நகரவில்லை. ‘பார்பர்’ என்று கௌரவமாக அழைக்கப்பட்டார். சலூன் கடைச் சுவர்களில் கவர்ச்சிகரமாகத் தொங்கிய நடிகைகளின் வண்ணப்படங்கள், சபலமான ஆண்களுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின. கீற்றுக் கொட்டகையில் முடியை வெட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால் ‘தீட்டு’ என ஒதுக்கப்பட்ட நிலைமை மாறியது. சலூன்களில் முகச்சவரம் செய்துகொண்டு, ஸ்நோ தடவி, பவுடர் பூசிக்கொண்டு விஷேசங்களுக்குக் கிளம்பும் மைனர்கள் உருவானது புதிய அத்தியாயம் தொடங்குவதற்கு வழிவகுத்தது.

அழுக்குத் துணி மூட்டைகள், கழுதை என்று மல்லாடிக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளர்களில் இளைஞர்கள் சிலர் ‘லாண்டரிக் கடை’ எனப் புதிதாகக் கிராமத்தில் தொடங்கினர். ‘அர்ஜெண்ட்-3; ஆர்டனரி 7 நாட்கள் எனத் தொங்கவிடப்பட்ட பலகையை எழுத்துக் கூட்டி வாசித்த கிராமத்தினருக்கு விநோதமாக இருந்தது. சட்டையை உடன் தேய்த்துத் தரவேண்டுமெனில், அதற்கெனக் கேட்கப்பட்ட கட்டணம் குறித்து மனதுக்குள் அதிருப்தி இருப்பினும், முணுமுணுப்பு இல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போயினர். எங்கள் ஊரில் லாண்டரிக்கடை வைத்திருந்த அய்யாக்காளை மிகச் சவடலாகப் பேசியவாறு, துணிகளைக் கங்குப் பெட்டியினால் அயர்ன் செய்து கொண்டிருந்தார். வருஷம் முழுவதும் துணியைத்தோய்த்துத் தந்துவிட்டு, ஏச்சினையும் திட்டினையும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் பொருளாதார ரீதியில் விடுதலைபெற லாண்டரிகள் வழிவகுத்தன.

அறுபதுகளின் நடுப்பகுதியிலே எங்கள் ஊரில் ‘டெய்லர்ஸ்’ எனப்படும் தையற்கடைகள் தொடங்கப்பட்டுவிட்டன. மூன்று அல்லது நான்கு தையல் இயந்திரங்கள் இயங்கிட, கடை முதலாளி, பெரிய மேசையின் முன்னர் நின்று துணிகளை ஸ்டைலாக வெட்டிக் கொண்டிருந்தனர். அவருடைய கழுத்தில் பெரிய ‘அளவு நாடா’ தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலான டெய்லர்கள் தி.மு.க. அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபிகளாக இருந்தனர். அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்குச் சார்பான பத்திரிகைகள் கடைகளுக்கு வந்தன. டெய்லரிங் கடையிலும் சலூன்களிலும் தினமும் வந்த தினத்தந்தி அல்லது கட்சிப் பத்திரிகைகள் படிக்க வாடிக்கையாளர் கூட்டம் போகும். டெய்லர்கள் ஓரளவு அரசியலறிவு பெற்றிருந்தனர். எனவே ஆரவாரமில்லாமல் கடைக்கு வருகிறவர்களிடம் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டனர். எங்கள் ஊரில் நாஞ்சில் நாதன் என்பவர் ‘திராவிடநாடு தையலகம்’ என்ற கடையை நடத்தி வந்தார். தொடக்கப்பள்ளிக்கூட மாணவனான என்னிடம்கூட அறிஞர் அண்ணாவின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.

எழுபதுகளில் சிதையத் தொடங்கிய கைவினைஞர்களின் வாழ்க்கை, பிற்காலத்தில் இன்னும் மோசமானது. எல்லாவற்றுக்கும் கணக்குப்பார்க்கும் நிலைமையும் விவசாயம் கட்டுப்படி ஆகாத நிலையும், குடியானவர்களைச் சிக்கலுக்குள்ளாக்கியது. எனவே பழைய முறைகளும் பழக்க வழக்கங்களும் மாற்றத்திற்குள்ளாயின. நவீன வாழ்க்கைக்குப் பொருந்திப் போக இயலாத கைவினைஞர்கள், புதிய பிரச்சினைகளை எதிர் கொண்டனர். வேறு தொழில்களோ, கல்வியறிவோ இல்லாதவர்கள் பாடு இன்னும் கஷ்டமானது.
தமிழீழம் அது தனியீழம்

தற்போதைய இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.

ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிர
இலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு. இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.

கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!
இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!
கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!
விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.

ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள் நிகழ்ந்துள்ளன.
ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்
தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.

கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.
ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.

சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.

சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!
சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!

தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.

1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.
இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!
ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!

இன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!
பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!
பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.

பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!
காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!
ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!

செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!
எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்! எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!
சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!
தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!
சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?
எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?
ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?

1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.
ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!

தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!

இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்; அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!
ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!
ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!
ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!

இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!
இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.
தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!

ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.
பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!
இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!
இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!

ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!

15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!

ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!
தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.
ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?
அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?
புலி






அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும்
முடியவில்லை...
வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்
இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு
ஒன்றும் நடத்தப்பட்டது

அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே........ ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...
நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..

அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி............ .
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்
"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"
உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?

அதற்கு பன்றி

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25
வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு............ ..