![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaeQo2oTh71VpDrtIzem41dY2sapET5wCxpisMMvo_pWSRftbu93qNPuxs7nAQiUXVQe-dYk1DizpU2Jya0pVTcpC9b5JzUSNHQLtO4E5cpXAK8lZOSI2uZigi86W1X8FQ2f-fteCKGYQf/s400/1071Priyamani_8.jpg)
வெண்ணிக் குயத்தியார்
வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. குயவர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது.
புறநானூறு 66" நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை: அரச வாகை.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே
No comments:
Post a Comment